முருக சிவகுமார் (murugasivakumar)
வட தமிழகத்தில் புனித இடமாகவும் சிறப்புவாய்ந்த இடமாகவும் விளங்கும் நகரம்திருவண்ணாமலை. இந்நகரைச் சுற்றிலும் இனாம் காரியந்தல், வெங்காயவேலூர், ஆடையூர், வேடியப்பனூர் உள்ளிட்ட சிற்றூர்கள் உள்ளன. இனாம்காரியந்தலுக்கும் ஆடையூருக்கும் இடையே கௌதி வேடியப்பன் என்னும்பெயரில் அடுக்குத் தொடர் மலைகள் உள்ளன. ஊர்காவல் காத்த மாவீரர்கள்இறந்த பின்னர் நடுகல் நட்டு சிறு தெய்வமாக வழிபடும் மரபு கொண்டவர்கள்தமிழர்கள். இதனால் அப்பகுதியில் வேடியப்பனுக்கு நடுகல் நட்டு சாமியாகமக்கள் வழிபட்டு வருகின்றனர்

இந்நிலையில் தமிழக அரசின் இரும்பு கனிம சுரங்க நிறுவனத்தின் துணையுடன்ஜிண்டால் இரும்பு நிறுவனம், இந்த மலையில் இரும்பை வெட்டி எடுக்கமுடிவுவெடுத்துள்ளது. அதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கௌதி வேடியப்பன் மலை உள்ள பகுதி தரிசு நிலப்பகுதி அல்ல. கானகத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பட்ட காடுகள் உள்ளன. இரண்டுஇலட்சம் மரங்கள் இருக்கும் இந்த மலையை, விலங்குகளும் பறவைகளும்உறைவிடமாகக் கொண்டு வாழ்கின்றன. இந்த மலைகளில் உருவாகி சிறியஓடைகள் மூலம் வரும் நீர், இந்தப் பிரதேசத்தில் இயற்கைச் சூழல் அமைப்புக்குமிக முக்கியமானதாக உள்ளது

இத்தகைய சிறப்புகளை அழிக்கும் நோக்கில் ஜிண்டால் நிறுவனம் திட்டத்தைச்செயல்படுத்த உள்ளது. இந்த சுரங்கத் திட்டத்தால் இரும்புத் தாது துகள்வெளியேறி காற்றை மாசுபடுத்தும். இதனால் இந்தப் பகுதியில் உள்ள 20 சிற்றூர்களில் வாழும் 2 இலட்சம் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். இதுமட்டுமின்றி திருவண்ணாமலையை வலம் வரும் மக்களும் பாதிப்படைவர். இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களும் நிலத்தடி நீரும் இத்திட்டத்தால்பாதிக்கப்படும். மேலும், மலைகள் அழிக்கப்பட்டால் மழைவளம் இருக்காது. இதனால் பல இலட்சம் மக்களின் வாழ்நிலையும், உழவர்களின் விளைச்சலும்பாதிக்கப்படும்.

இந்த இரும்பு சுரங்கத் திட்டத்தால் பல இலட்சம் உழவர்கள் பாதிக்கப்படும்நிலையில் 185 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதாக ஜிண்டால் நிறுவனம்உறுதியளித்துள்ளது

325 எக்டேர் கானகப்பகுதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானித்துள்ளஇந்நிறுவனம், இப்பகுதியில் உள்ள மக்களுக்குத் திருநெல்வேலி மாவட்டத்தில்நிலம் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளனர். நிலம் தரமுடிமேயொழிய திட்டம்நிறைவேற்றும் பகுதியில் உள்ள இயற்கை சூழல் அமைப்பை தரமுடியாது.

இவ்வளவு பாதிப்புகளையும் விளைவுகளையும் தெரிந்திருந்தும் இது குறித்துஇப்பகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரியாதவாறு கமுக்கமாக வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக இருக்கும் அந்த அறிக்கை அதிகஅளவில் மக்களுக்குக் கிடைக்கப்படவில்லை.
இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு இரும்பு தாது கனிமக் கழகம், தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் ஆகியவற்றின் சா ர்பில் திசம்பர் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மு.இராசேந்திரன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் உயர் அதிகாரிகள், தொண்டு நிறுவனப் பேராளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி நிருவாகிகள், கௌதி வேடியப்பன் மலையைச்சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் என 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்தனர்.

325 எக்டேர் பரப்பில் ரூ.450 கோ டியில் இரும்பு தாது வெட்டி எடுக்கும் பணியால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் நிருவாக அதிகாரிகள் பேசினர்

இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், பசுமை தாயகம் அமைப்பு, எக்ஸ்னோரா, தமிழ்நாடு சுற்றுசூழல் கழகம் ஆகியவற்றின் சார்பில் கலந்துகொண்டவர்களும், பொதுமக்களும் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தால் மக்களுக்கு காது கேட்கும் திறன் குறையும், நுரையீரல் பாதிக்கப்படும், பழமையான வேடியப்பன் கோவில் பாழடையும், மலையைச்சுற்றியுள்ள பகுதிகள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படும், அரிய வகை பறவைகளும் விலங்குகளும் மூலிகைகளும் மரங்களும் அழிந்து போகும். எனவே, இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று எடுத்துக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இக்கூட்டம் பற்றியும், இயற்கைச்சூழல் பாதிப்பு குறித்தும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க .எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால், மக்களின் கருத்தை மீறி ஜிண்டால் நிறுவனத்தின் திட்டம் நிறைவேற்றப்படமாட்டாது என்றும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.இராசேந்திரன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஆயினும், அதிகாரம் படைத்தவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபடலாம். எனவே, பல இலட்சம் மரங்களையும், அங்கு வாழும் விலங்குகள்- பறவைகளையும், மக்களையும் பாதுகாக்க கௌதி வேடியப்பன் மலை அழிப்புத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அப்பகுதியில் செயல்பட்டுவரும் கௌதி வேடியபன் மலை பாதுகாப்பு இயக்கம், பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
முருக சிவகுமார் (murugasivakumar)

வீட்டில் ஒரு மகனும் தந்தையும் அமர்ந்திருந்தனர். நீண்ட நாட்களாக மனத்தில் இருந்த ஒரு ஐயத்தைக் கேட்டுவிட வேண்டும் என்று மகன் எண்ணினான். தன் தந்தையிடம் மகன், நான் குழந்தையாக இருக்கும்போது கன்னுக்குட்டின்னு செல்லமாகக் கூப்பிட்டீங்க, இப்போ மாடுன்னு திட்டுறீங்களே... என்று கேட்டான். அதற்குத் தந்தை விடையளித்தார்,உன் அம்மா உனக்குப் பால் கொடுக்கல.. நீ மாட்டுப்பால் குடித்துதான் வளர்ந்த, அதனாலதான் அப்போ கன்னுகுட்டி... இப்போ மாடு.. நீ வளந்துட்ட.. நான் செல்லமாதான் கூப்பிடுறேன்என்றார். இப்போது பெரும்பாலான குழந்தைகள் மாட்டுப் பால் குடித்துதான் வளருகின்றன.


ஒரு பாலூட்டியின் பாலும் வேறொரு பாலூட்டியின் பாலும் குணத்தில் வேறுபாடுடையது. உலகில் உள்ள அனைத்துப் பாலூட்டிகளின் பாலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் மூகத்தில் தாய்ப் பாலுக்கு மாற்றாகக் குழந்தைகளுக்கு விலங்கின் பால் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தாயின் பால் குழந்தைக்கு அறிவைக் கொடுக்கிறது. இது அனைத்துப் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு பாலூட்டியின் பாலை வேறொரு பாலூட்டியின் குழந்தைக்குக் கொடுக்கும்போது உடல் எடை கூடுவதாகவும், அறிவு வளம் குறைவதாகவும் கூறப்படுகிறது.


தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்து தப்பிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து இளமை பருவத்தை அடையும்போதும் சீரான எடையுடன் வளர தாய்ப்பால் உதவுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து த்துகளும் அடங்கியிருக்கின்றன. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியுடன் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றிற்குத் தாய்ப்பால் துணை நிற்கிறது. பிறந்து 6 மாதங்கள் முதல் 1 வயதுவரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளில் 80 விழுக்காட்டினர் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதில்லை. குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய்வரும் வாய்ப்பைத் தாய்ப்பால் குறைக்கிறது.


ஒவ்வாமையினால் ஏற்படும் மூச்சிறைப்பு நோயைத் தடுக்கும் வல்லமையும் தாய்ப்பாலில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்தில் மரபு வழியாக நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து இருந்தால், அக்குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதக் காலங்கள் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவந்தால் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம்.


தாய்ப்பாலில் இருக்கும் அமிலத்தன்மையானது என்டோர்வின் எனப்படும் வலி போக்கியை (நிவாரணியை) அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வல்லமை குழந்தைகளின் உடலுக்கு வருகிறது. மழலைப் பருவத்தில் குழந்தைகளை நச்சுயிரி(வைரஸ்), நுண்ணுயிரிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறான திடீர்ச் சாவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு இருக்கிறது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த தாய்ப்பால் என்ற உயர்ந்த கொடை தாய்க்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், பெண்களில் பலர் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் தங்களின் உடலின் வனப்பும் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். ஐந்தறிவு உள்ள மாடு, எருமை, ஆடு உள்ளிட்ட விலங்குகள் குட்டி ஈன்றதும், பால் கொடுக்கின்றன. பிற உயிரினத்திற்கும் தன் பாலை கொடையாகக் கொடுத்தாலும், தன் குட்டிக்குப் பால் கொடுக்காமல் இருப்பதில்லை. மனிதர்களின் தங்களின் தேவைக்கு மாட்டுப் பாலை கரந்துக்கொள்ளும் போதும் துன்பப்பட்டாவது தன் குட்டிக்குப் பால் ஊட்டி மகிழ்கிறது. இவ்வாறு ஐந்து அறிவுள்ள விலங்குகள் பாலூட்டுவதில் அக்கறையுடன் இருக்கும்@பாது, பெண்களில் சிலர் தங்களின் வனப்பையும், உடல் கட்டையும் காரணமாகக் கூறிப் பாலூட்டாமல் இருப்பது வருந்தத்தக்கது.


குழந்தைக்கு பாலூட்டாத பெண்களின் செயலை வணிக நிறுவனங்கள் ஊக்கப்படுத்துகின்றன. தங்களின் பொருட்களை விற்பனை செய்யப் புதிய உத்திகளைக் கையாளுகின்றன. தாய்ப்பாலைவிட தாங்கள் உருவாக்கும் பொருட்களில் த்து அதிகமாக இருப்பதாக விளம்பரப்படுத்தித் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு தொலைக்காட்சிகளிலும் பதாகைகளிலும் பரப்புரை செய்கின்றன. ஆனால், வணிக நிறுவனங்கள் தரும் த்துப் பொருட்கள் அனைத்தும் தாய்ப்பாலின் குணங்களுக்கு ஈடாவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆகவே, இத்தகைய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைச் ட்டத்திற்குப் புறம்பானது எனச் சில நாடுகள் அறிவித்துள்ளன. மேலும், தாய்ப்பால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதால் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் வலியுறுத்துகின்றன.


குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணின் உடல் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் கருத்துகளை மருத்துவ ஆய்வுகள் முற்றிலும் மறுத்துள்ளன. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் உடலில் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இந்த எடை காரணமாக உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்துவிடும் இதனால் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு உருவாகும். அந்தத் தேவையற்ற கலோரியை இழப்பதற்குப் பெண்கள் பாலூட்டுவது இன்றியமையாதது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாதவிலக்குக் காலத்திற்குப் பின்னர்ப் பெண்களுக்கு ஆஸ்டியோ பெட்ரோசிஸ் எனப்படும் எலும்புமுறிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் வருவதில்லை. மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குருதிப்போக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது கட்டுக்குள் வருவதாகவும், அவ்வாறு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குக் குருதிபோக்குத் தொடர்ந்து நீடிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பாலூட்டும் பெண்களுக்கு மாதவிலக்குக் காலம் 20 முதல் 30 வாரங்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.


குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரையும் பார்க்கும் திறன் 12 முதல் 15 அங்குலம் வரை இருக்கும். தாயின் மார்புக்கும், முகத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஏறக்குறைய 15 அங்குலம் இருக்கும் என்பதால் குழந்தை பால் குடிக்கும்போது தாயின் முகத்தை உற்று கவனிக்கும். இதனால் அத்தாயின் முகம் குழந்தையின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒரு குழந்தை தனியாக இருக்கும்போது வேறொருவரும், அக்குழந்தையின் தாயும் ஒரே நேரத்தில் அழைக்கும்போது அக்குழந்தை ட்டெனத் தாயிடம் செல்லும்। தாயின் முகம் பழக்கப்பட்ட முகம் என்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.


தாய்ப்பாலின் மணத்தைக் குழந்தை விரும்புகிறது. இதனாலும் எளிதில் தாயைக் கண்டுகொள்கிறது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு கொப்பூழ்க்கொடி வழியே ஏற்படுகிறது. அதனைப் வலுப்படுத்தத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்குத் தாயின் மீது அன்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


குழந்தை குடிக்கக் குடிக்க ஊறிக்கொண்டே இருப்பது தாய்ப்பாலின் தனித்தன்மை. தாய்க்கு மட்டுமே பால் கொடுக்கும் உயர்ந்த கொடை இருக்கிறது. எனவே, தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குத் தவறாமல் கொடுத்துக் குழந்தைக்கும், தாய்க்குமான உறவை வலுப்படுத்துவோம்.