முருக சிவகுமார் (murugasivakumar)
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தி
.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் 12 இடங்கள் ஏற்கெனவே அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றவை. 9 இடங்கள் புதியவை. அதே போல் காங்கிரசு கட்சி களமிறங்கும் 16 தொகுதிகளில் 7 இடங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும்.
தி.மு.க. தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்களில் தி.மு.க.வும், 16 இடங்களில் காங்கிரசு கட்சியும், 2 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளும், 1 தொகுதியில் முசுலிம் லீக் கட்சியும் போட்டியிடுமென்று சனிக்கிழமை இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை ஞாயிற்றுக் கிழமை கலைஞர் அறிவித்தார்.

தி
.மு.. போட்டியிடும் 21 தொகுதிகளின் விவரம்:
1. திருவள்ளூர், 2. வடசென்னை 3. தென்சென்னை, 4.மத்திய சென்னை, 5. திருப்பெரும்புதூர், 6.அரக்கோணம், 7. கிருட்டினகிரி, 8.தருமபுரி, 9.திருவண்ணாமலை, 10.கள்ளக்குறிச்சி, 11. நாமக்கல், 12.நீலகிரி (தனி), 13.பொள்ளாச்சி, 14.கரூர், 15. பெரம்பலூர், 16. நாகப்பட்டினம் (தனி), 17.தஞ்சாவூர், 18.மதுரை, 19.இராமநாதபுரம், 20.தூத்துக்குடி, 21.கன்னியாகுமரி.

இவற்றில்
சென்னையில் உள்ள 3 தொகுதிகள், திருப்பெரும்புதூர், கிருட்டினகிரி, திருவண்ணாமலை (பழையபெயர்: திருப்பத்தூர்), கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்Œõவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி (பழைய பெயர்: திருச்செந்தூர்) ஆகிய 12 தொகுதிகள் ஏற்கெனவே தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றவை. மீதமுள்ள 9 தொகுதிகளில் தி.மு.க. இம்முறை புதிதாகப் போட்டியிடுகிறது.

கடந்த
தேர்தலில் தி.மு.க. 15 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அவற்றில் இம்முறை போட்டியிடும் 12 தொகுதிகள் தவிர மீதமுள்ள 3 தொகுதிகளில் ஈரோடு (பழைய பெயர் திருச்செங்கோடு), கடலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொகுதி கலைக்கப்பட்டுவிட்டது.

காங்கிரசு
கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளின் விவரம்:
1.காஞ்சிபுரம் (தனி), 2.ஆரணி, 3.சேலம், 4.ஈரோடு, 5.திருப்பூர், 6.கோவை, 7.திண்டுக்கல், 8.திருச்சி, 9.கடலூர், 10.மயிலாடுதுறை, 11.சிவகங்கை, 12.தேனி, 13.விருதுநகர், 14.தென்காசி, 15.திருநெல்வேலி, 16.புதுச்சேரி.
இவற்றில் சேலம், திருப்பூர் (பழைய பெயர்: கோபி), திண்டுக்கல், மயிலாடுதுறை,சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே காங்கிரசு போட்டியிட்டு வெற்றி பெற்றவை. மீதமுள்ள 9 தொகுதிகள் புதிய தொகுதிகள்.

கடந்தமுறை
காங்கிரசு வென்ற நாமக்கல் (பழைய பெயர்: இராசிபுரம்), நீலகிரி ஆகிய தொகுதிகள் இம்முறை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பழனி தொகுதி கலைக்கப்பட்டுவிட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளின் விவரம்:
விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)

இந்திய
யூனியன் முசுலிம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதி: வேலூர்

தி
.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அக்கட்சி தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் தி.மு.க. அணியில் சேர மனிதநேய மக்கள் கட்சி மறுத்துவிட்டது.

அதிமுக
கூட்டணியில்..
இந்தியக் கம்யுனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி)
முருக சிவகுமார் (murugasivakumar)
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது. இப்போர் காரணமாக கிழக்கு மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஆண்கள் பலரும் இறந்துவிட்ட நிலையில் 49,000 பெண்கள் கைம்பெண்களாகி விட்டனர்! இது தொடர்பாக இலங்கை அரசுக்கு ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்
, “கைம்பெண்கள் அனைவரும் வேலை வாய்ப்பு கிடைக்காததால் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வேலை அளிக்காவிட்டால் அவர்களில் பலர் மனிதவெடிகுண்டுகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த
49,000 கைம்பெண்களில் 35,000 பேர் 30 வயதுக்கு கீழானவர்கள். இது தவிர போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்த 8,000 கைம்பெண்களும் வேலையில்லாமல் இருக்கின்றனர். இது மிகவும் கடுமையான விசயமாகும். இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில்
நடைபெறும் போர் காரணமாகப் பலர் கைம்பெண்களாகியுள்ளனர் என்பது ஒருபுறம் என்றால், இதுதவிர 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல்கோளின் (சுனாமி) போது பலர் தங்கள் கணவரை இழந்தனர். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக மறுவாழ்வு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்கள் போர்ப்படையில் சேர்ந்து மனிதவெடிகுண்டாக மாறுவதை தவிர இவர்களுக்கு வேறு வழியே இல்லை என்றும் ஐ.நா. உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் கைம்பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த ஆண்டிலும் ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ஒரு ஆண்டுகாலமாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக கிழக்கு மாநில முதல்வராக இருக்கும் பிள்ளையன் கூறுகையில், 'திரிகோண மலையில் நிலவெளி, மட்டக்களப்பு, பொட்டுவில் ஆகிய இடங்களில் கிழக்கு சுற்றுலா வளர்ச்சி ஆணையம் பல திட்டங்களை தொடங்கியுள்ளது. அத்திட்டங்கள் கைம்பெண்களின் வேலைவாய்ப்புக்குப் பயன்படும்'' என்றார்.

ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அழிக்கும் எண்ணத்துடன் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள்செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கைக்கூலிகளாக பிள்ளையான் போன்ற தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள் . இந்த நிலையில் ஐ.நா. அதிகாரியின் எச்சரிக்கை எடுபடும் என்று தெரியவில்லை.
ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று பொய்யான ஒரு காரணத்தை கூறி இலங்கை அரசு அப்பாவித் தமிழ்மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி கொன்று வருகிறது. நாள்தொறும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஏராளமானோர் அடுத்த நாள் இருப்போமா என்று தெரியாமல் அச்சத்துடன் நொடி பொழுதுகளை வருகின்றனர் என்பதும் அங்கு குண்டுகளால் வெடித்து சிதறிய உடல்கள் அடக்கம் செய்வாரின்றி தானே அழுகுகின்றன என்பதும் ஐ.நா.அவைக்கு தெரியாதா என்ன?

இவ்வளவு தெரிந்திருந்தும் போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கும் - இராசபக்செவுக்கும் துணிச்சலுடன் கட்டளையிடாமல் ஐ.நா.அவை அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கைகளை விட்டு வருகிறார்கள்.
ஐ.நா.வின் அறிக்கைகளோ தமிழகத் தலைவர்களின் அறிக்கைகளோ தமிழ் இனத்தை ஒருபோதும் காப்பாற்றாது என்பதை உணராமல் இருப்பதுதான் தமிழ்ர்களின் பலவீனம்.

இதனை நன்றாகவே அறிந்திருந்ததால்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, "போரை நிறுத்த இலங்கைக்கு கட்டளையிட முடியாது'' என்று கர்ஜித்தார். அதே முகர்சி, தூத்துக்குடிக்கு வந்து பேசியபோது, '' விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் இலங்கையில் போரை நிறுத்துமாறு பேசுவார்கள். தமிழ்மக்களை கொல்வதற்கு காங்கிரசு அரசு ஆய்தம் தாங்கிய வானூர்தியை தில்லியில் இருந்து அனுப்ப, அதே தமிழ்மக்களுக்காக தமிழகத்தில் இருக்கும் காங்கிரசுகாரர்கள் சேகரித்த உணவு, மருந்து பொருட்கள் வேறொரு வானூர்தியில் அனுப்பப்படும். இத்தகைய நல்ல செயலை செய்யும் காங்கிரசாரை "எந்த சொல்லால்" அழைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது?

சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள், சட்டம், வாழ்வுரிமை, ஐ.நா.அவை. செயல்பாடு ஆகிய சொற்களுக்கு பொருள்தான் என்ன? அகராதிகளில் தவறாக இருந்தால் திருத்துங்கள் - ''இலங்கையில் 49,000 கைம்பெண்கள் தவிப்பு"-இந்த சொற்களை பார்த்தாவது!
முருக சிவகுமார் (murugasivakumar)

திங்கட்கிழமை அன்று மாலை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதியை காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு மற்றும் சட்டப் பேரவை கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதனை அறிந்த செய்தியாளர் ஒருவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, காங்கிரசுடனான கலந்தாய்வு குறித்து கேட்டார்.
அதற்கு விடையளித்த கருணாநிதி, "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம்" என்று கூறினார்.

கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறுகின்றன? என்று கேட்டபோது, "தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்தியத் தேசியக் காங்கிரசு, இந்திய யூனியன் முசுலிம் லீக் , மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இடம் பெற்றுள்ளன " என்றும் "அவற்றிற்கான தொகுதிகள் பகிர்ந்து கொள்ள ப்பட்டு இரண்டொரு நாளில் அறிவிக்கப்பட இருக்கிறது" என்றும் கூறினார்.

இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம் பெறுகிறதா? என்று கேட்டதற்கு விடையளித்த கருணாநிதி, "இடம்பெற்றால் அறிவிப்போம்" என்று கூறினார்.

காலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசை, காங்கிரசு தலைவர் தங்கபாலு சந்தித்துப் பேசினார். பிறகு மாலையில் தங்கபாலு, கருணாநிதியை சந்தித்தார். அதன் பின்னர் தான் கருணாநிதி தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பட்டியலை அறிவித்தார். இதையெல்லாம் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரப்போவதில்லை என்றே தெரிகிறது.

ஆக, .தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தமிழகத்தில் காங்கிரசு - தி.மு.க. கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் .

துரோகம் சும்மா விடுமா? தமிழினத்துக்கான துரோகத்துக்கு பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழினம் பயன்படுத்திக்கொண்டால் எதிர் காலத்துக்கு நல்லது.
முருக சிவகுமார் (murugasivakumar)

பள்ளத்து தெருவுல
மண்ணுலயும்
கரும்பு சோகையிலேயும்
எ றவானம் இடிக்கிற
வூடுதான் ஊரெல்லாம்...

சனமெல்லாம் தெரண்டு
கல்வூடு கட்டினோம்
காளியாத்தாவுக்கு...

கையில
சாட்டை
தலையில கரகம்
நாக்க கடிச்சிகினு
பெருமாள் தாத்தா
சாமி வந்து ஆடுவாரு ...

உக்கரமாஆடும்போது
விலகின வேட்டி சந்துல
பின்னால
குண்டூசியில
குத்திட்டாரு சுப்ர மாமா

"தேவிடியா பசங்களா
இனிமே மயிருள்ள கூட
சாமியாட வரமாட்டேன்"னு
கரகத்தை போட்டுட்டு
ஓடிடுச்சி சாமி

ஊரே சிரிச்சது சாமிய பார்த்து