முருக சிவகுமார் (murugasivakumar)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் ஓர் உடலை காட்டி செய்தி வெளியிட்டது. அந்த உடலை காட்டுவதற்கு முன்னர் மூன்று நாட்களில் பிரபாகரன் சாவு குறித்து பல்வேறு முரண்பட்ட செய்திகளை இலங்கை இராணுவம் கூறியது. அதாவது, பிரபாகரன் புலிகளுடன் தற்கொலை செய்துகொண்டார். பிரபாகரன் முக்கிய தளபதிகளுடன் ஓர் மூடுந்தில் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டார்; உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அவற்றில் பிரபாகரன் உடல் எது என்பதை கண்டறிய முயன்று வருகிறோம் என்று கூறியது.
இந்த முரண்பட்ட தகவல்களால் இது பிரபாகரன் உடல் என்று சிங்கள இராணுவம் காட்டிய உடலை பெரும்பாலானோர் நம்பவில்லை. இந்நிலையில் பிரபாகரன் இறக்கவில்லை; உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரெதிராக "பிரபாகரன் இறந்தது உண்மை" என்று கூறப்பட்டது. இதனால் பிரபாகரன் சாவில் மர்மம் தொடர்கிறது.

இந்நிலையில், இலங்கை காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ள கருத்து, பிரபாகரன் விசயத்தில் ஒரு மாறுபட்ட முரண்பட்ட கருத்தாக உள்ளது.

கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆய்தக்குழு இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதனை அறிந்து அங்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தியது. அப்போது, ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது.
"துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், "துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞர் பெயர் விமலன். அவர் யாரெனில், கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரின் மகன். விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடையவர் சற்குணராஜா என்று பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.
சற்குணராஜா பற்றி இலங்கைப் படையினர் நடத்திய விசாரணையில், அவர் தற்போது இலங்கையில் இல்லை; தப்பி வேறொரு நாட்டுக்கு சென்றுவிட்டார் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

"கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான நிழற் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நிழற் படமொன்று இருந்துள்ளது.
இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற உருவமுடைய ஒருவர் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது . நிழற் படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் வேறொரு நாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது'' என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சற்குணராஜா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவத்தை ஒத்த உருவத்தை உடையவர் என்று இலங்கை காவல்துறை ஒப்புகொண்டுள்ளது. பிரபாகரன் உருவமுடைய இரண்டு பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் தப்பிவிட்டார். தப்பியவர் பிரபாகரனாக கூட இருக்கலாமே?

இது குறித்து கொட்டாஞ்சேனை காவல் துறையினர் உட்பட சிறப்பு காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றது.
முருக சிவகுமார் (murugasivakumar)
1. மன்மோகன் சிங் - பிரதமர்
2. பிரணாப் முகர்சி - நிதித்துறை
3. சரத்பவார் - உணவு - வேளாண்மை
4. ஏ.கே . அந்தொணி - பாதுகாப்பு
5. சிதம்பரம் - உள்துறை
6. மம்தாபானர்சி - தொடர்வண்டித்துறை
7. எஸ்.எம். கிருட்டினா - வெளியுறவுத்துறை
8. வீரபத்ரசிங் - இரும்பு எஃகுத்துறை
9. விலாஷ்ராவ் திஷ்முக் - கனரக தொழில்துறை
10. குலாம்நபி ஆசாத் - நலவாழ்வு
11. சுசில்குமார் ஷிண்டே - மின்சாரம்
12. வீரப்பமொயலி - சட்டம் - நீதி
13. பரூக்அப்துல்லா - புதுப்பிக்கவல்ல எரிசக்தி
14.ஜெயபால் ரெட்டி - நகர்ப்புறவளர்ச்சி
15. கமல்நாத் - சாலை போக்குவரத்து
16. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்
17. மீராகுமார் - நீர்வளத்துறை
18. தயாநிதிமாறன் - ஜவுளித்துறை
19. ஆ. இராசா - தொலைத்தொடர்பு - தகவல் தொழில்நுட்பம்
20. முரளிதியோரா - பெட்ரோலியம்
21. அம்பிகா சோனி - செய்தி ஒலிபரப்பு
22. மல்லிகார்ஜூன கார்கே - தொழிலாளர் நலம்
23. கபில்சிபல் - மனிதவள மேம்பாடு
24. ஹான்டிக் - சுரங்கத்துறை
25. ஆனந்த்சர்மா - தொழில் - வணிகத்துறை
26. சி.பி. ஜோஷி - ஊரக வளர்ச்சி - பஞ்சாயத்துராஜ்
27. செல்சா - சுற்றுலா - வறுமை ஒழிப்பு
28. சுபோத்கான் சகாய் - உணவு பதனத்துறை
29. எம்.எஸ்.கில் - விளையாட்டு
30. வாசன் - கப்பல் போக்குவரத்து
31. பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்
32. முகுல்வாச்னிக் - சமூகநீதி
33. காந்திலால் பூரியா - பழங்குடியினர் நலன்
34. அழகிரி - ரசாயனம் - உரத்துறை

நடுவண் அரசின் இணை அமைச்சர்கள் பொறுப்பு

1. சிறீகாந்த் ஜெனா - இரசாயணம் மற்றும் உரம்
2. இ. அகமது - தொடர்வண்டித் துறை
3. முல்லப்பள்ளி இராமசந்திரன் - உள்துறை
4. வி.நாராயணசாமி - திட்டம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்
5. ஜோதிர்ஆதித்திய சிந்தியா - வணிகம் மற்றும் தொழில்
6. டி.புரந்தரேஸ்வரி - மனித ஆற்றல் மேம்பாடு
7. கே .எச்.முனியப்பா - தொடர்வண்டித் துறை
8. அஜயா மக்கன் - உள்துறை
9. பனபாக இலட்ஷ்மி - ஜவுளி
10. நமோ நாராயண் மீனா - நிதி
11. எம்.எம்.பல்லம் இராஜு - பாதுகாப்பு
12. சவுகத ரே - நகர்ப்புற வளர்ச்சி
13. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதி
14. ஜிதின் பிரய்வதா - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவளி




15. ஏ.சாய் பிரதாப் - உருக்காலை
16. பிரினீத் கவுர் - வெளியுறவு
17. குருதாஸ் காமத் - தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
18. ஹரீஷ் இராவத் - தொழிலாளர் மற்றும் வேலைவாயப்பு
19. கே.வி.தாமஸ் - வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வழங்கல்
20. பரத்சின் சோலங்கி - மின்சாரம்
21. மாதவ் எஸ்.கண்டேலா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை
22. திநேஷ் திரிவேதி - நலவாழ்வு மற்றும் குடும்ப நலம்
23. சிசிர் அதிகாரி - ஊரக வளர்ச்சி



24. சுல்தான் அகமது - சுற்றுலா
25.முகுல் இராய - கப்பல் போக்குவரத்து
26.மோகன் ஜதுவா - செய்தி , ஒலிபரப்பு
27. டி.நெப்போ லியன் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
28. எஸ்.ஜெகத்ரட்சகன் - செய்தி, ஒலிபரப்பு

29. எஸ்.காந்திசெல்வன் - நலவாழ்வு மற்றும் குடும்ப நலம்
30. துஷார்பாசவுத்ரி - பழங்குடியினர் நலன்
31. ச ச்சின் பைலட் - தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
32. அருண் யாதவ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
33. பிரதிக் பாட்டீல் - கனரகத் தொழில்கள் மற்றும் அரசு நிறுவனங்கள்
34. ஆர்.பி.என். சிங் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
35. சசி தரூர் - வெளியுறவு
36. வின்சேன்ட் பாலா - நீர் வளம்
37. பிரதீப் ஜெயின் - ஊரக வளர்ச்சி
38. அகதா சங்மா - ஊரக வளர்ச்சி
முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் சிங்களப் படையினருடனான போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் என்று கூறி சில ஒளிப்படங்களை (வீடியோ ) இலங்கை அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த உடல் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல என்றும், பிரபாகரனைப் போல பிளாஸ்டிக் சர்ஜரிசெய் யப்பட்ட யாரோ ஒருவரின் உடல் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்தியாவும் இது குறித்து ஐயம் எழுப்பியிருப்பதுடன், பிரபாகரன் பற்றிய கூடுதல் ஆதாரங்களை தரும்படி சிங்கள அரசு வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கடந்த திங்கள்கிழமை அதிகாலை பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து தளபதிகளுடன் தப்பிச் செல்ல முயன்றபோது ஏவுகணை வீசி சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் இலங்கை அரசு வெளியிடவில்லை. இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் உயிருடன் நலமாக உள்ளார் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பன்னாட்டு தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே, சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் கிடைத்திருப்பதாக அறிவித்த சிங்களப் படை, பிரபாகரனைப் போல் தொற்றமளிக்கும் உடலின் ஒளிப் படங்களையும் வெளியிட்டது. பிரபாகரன் 2 நாட்களுக்கு முன்@ப கொல்லப்பட்டு விட்டார். அவரின் உடல் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழைமை காலை கண்டெடுக்கப்பட்டது. அவரின் தலையில் குண்டு பாய்ந்த காயங்கள் இருந்தனஎன்று சிங்களப் படை தளபதி சரத் பொன்சேகாவும், செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காராவும் தெரிவித்தனர். ஆனால் பிரபாகரனின் உடல் தோற்றம் பற்றி செய்தியாளர் எழுப்பிய ஐயங்களுக்கு நாணயக்காரா விடையளிக்கவில்லை.

இலங்கை அரசு வெளியிட்ட ஒளிப்படத்தில் இருப்பது பிரபாகரனின் உடல்தான் என்று இலங்கை அரசு கூறினாலும், பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே நேற்று காலை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பிரபாகரன் பற்றி எதுவுமே குறிப்பிடாத நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பிரபாகரனின் உடல் படத்தை சிங்களப் படை வெளியிட்டது ஏற்கும்படி இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனின் உடல் 2 நாட்களுக்கு தண்ணீரில் கிடந்ததாக சிங்களப் படை கூறியுள்ளது. அவ்வாறு தண்ணீரில் கிடந்தால் உடலும், முகமும் உப்பிப்போவதுடன், கருத்துப் போயிருக்கும். ஆனால் பிரபாகரனின் தலையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படும் இடத்தில் குருதித் துளிகளே இல்லை. பிரபாகரனின் கண்களும் செயற்கையாக பொருத்தியது போல் தொன்றுகிறது. தண்ணீரில் 2 நாட்கள் கிடந்த உடலின் தலையை தூக்கவே முடியாது. ஆனால் பிரபாகரனுடையது எனப்படும் உடலின் தலையை சிங்களப் படை வீரர் ஒருவர் மிக எளிதாக தூக்கிக் காட்டினார். எனவே இதுபிரபாகரனுடையது இல்லை என்ற ஐயம் எழுந்துள்ளதுஎன்று கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

பிரபாகரனின் உடல் நேற்று காலை தான் கண்டெடுக்கப்பட்டதாக சிங்கள போர்ப்படை தெரிவித்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களி@@ய அவரின் உடலை மரபணு ஆய்வு செய்து விட்டதாக சிங்கள போர்ப்படை கூறியிருப்பதும் ஐயத்தை அதிகரித்துள்ளது. பிரபாகரனுக்கு 55 வயதாகும் நிலையில், இலங்கை அரசு வெளியிட்டுள்ள படத்தில் அவரின் உடல் 25 முதல் 40 வயதானதைப் போல மிகவும் இளமையாகத் தோன்றுகிறது.

சிங்களப் படையினரால் தேடப்படும் பிரபாகரன் தப்பிச் செல்வதாக இருந்தால் ஏன் சீருடையுடன் செல்ல வே ண்டும்? அடையாள அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்?

திங்கள்கிழமையன்று ஏவுகணை வீசி கொல்லப்பட்டதாகவும், இதில் பிரபாகரனின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டதாகவும் கூறிய சிங்களப் படை, அடுத்த நாள் பிரபாகரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறி உருக்குலையாத உடலை காட்டியது எப்படி?

தலைப் பகுதியை காட்டாமல் துணி போட்டு மூடி வைத்திருந்தது ஏன்? பிரபாகரனை கரய முள்ளிவா#க்கால் பகுதியில் சுற்றி வளைத்து விட்டதாக முதலில் கூறிய சிங்களப்படை, பின்னர் அவரின் உடலை நந்திக்கடல் என்ற இடத்தில் கண்டெடுத்ததாகக் கூறுவது ஏன்? என்பவை உள்ளிட்ட பல்வேறு வினாக்களை ஊடகத் துறையினர் எழுப்பியுள்ளனர். ஆனால் இவற்றில் எந்த வினாக்களுக்கும் விடையளிக்கப்படவில்லை.

அது மட்டுமின்றி, “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வழக்கமாக தலை முடிக்கு சாயம் பூசுவது கிடையாது; அடிக்கடி முகச்சவரம் செய்வதும் இல்லை. அது மட்டுமின்றி அண்மைக் காலமாக அவர் மீசை வளர்ப்பதும் இல்லை. ஆனால் பிரபாகரனுடையது என்று கூறப்படும் உடலின் முகத்தில் அப்போதுதான் முகச்சவரம் செய்யப்பட்டிருக்கிறது . மேலும் இயல்புக்கு மாறாக மீசை இருப்பதுடன், தலைக்கும், மீசைக்கும் சாயம்பூசப்பட்டுள்ளது. பிரபாகரனின் உண்மையான காதும், படத்தில் காட்டப்படும் காதுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பிரபாகரனின் மூக்கு இயல்பாக இருப்பதை விட படத்தில் மிகவும்கூராக உள்ளது. பிரபாகரனின் நாடியில் ஒரு வெட்டுக் காயம் இருக்கும். ஆனால் படத்தில் வெட்டுக் காயம் இல்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் பிரபாகரனின் உடல் பிளாஸ்டிக் சரஜரி முறையில் உருவாக்கப்பட்டது போல தொன்றுகிறதுஎன்றும் அந்த வல்லுநர்கள் கூறினார்கள். இலங்கை அரசு வெளியிட்ட படத்தை இந்தியாவும் நம்பவில்லை. பிரபாகரன் குறித்த மேலும் ஆதாரங்களை வெளியிடும்படி இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனிடை@ய பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் இயக்க பன்னாட்டுத் தொடர்பாளர் பத்மநாதன் மீண்டும் கூறியுள்ளார்.

.

முருக சிவகுமார் (murugasivakumar)

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், இந்திய அரசும் அறிவித்துள்ளன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் இரு நாட்டு அரசுகளும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்றும், அவர் படுகொலை செய்யப்பட்டதாக சிங்களப் படையினர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் மனஉறுதியை குலைப்பதற்காகவே சிங்களப் படை திட்டமிட்டு பொய் செய்திகளைப் பரப்பி வருகிறது. இலங்கைப் போரில் பிரபாகரன் படுகொலை செய்யப்படவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள அரசும், ஆங்கில ஊடகங்களும் பரப்பி வரும் பொய்திகளை நம்ப வேண்டாம்என்று நேர்காணலில் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள கரய முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தலைவர் சூசை ஆகியோர் குண்டு துளைக்காத ஊர்தியில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது சிங்களப் படையினர் ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் மூவரும் கொல்லப்பட்டதாகவும் சிங்கள போர்ப்படை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக சிங்கள அரசு தரப்பில் பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என்று ஈழத் தமிழர் ஆதரவு இணையதளமான அதிர்வு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்களை இலங்கைப் போர்ப்படை வெளியிட்டு வருகிறது. இலங்கைப் போர்ப்படை கூறி வருவதை அவர்களால் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்க முடியாது. சிங்களப் படையினரால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதி செய்யபடவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரின் உடல்களை யூகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று போர்ப்படை கூறி வருகிறது. எனவே உண்மை விரைவில் வெளியாகும். அதுவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும்என்று அதிர்வு இணையதளம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் பிரபாகரன் கொல்லப் பட்டதை இலங்கை அரசு உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை. போர் நடைபெறும் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பிரபாகரனும் ஒருவராக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக மரபணு ஆயவுகள் எதுவும் நடத்தப்படவில்லை. உளவுத் தகவல்களின் அடிப்படையில்தான் நாங்கள் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்என்று மட்டுமே போர்ப்படை செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா காலை தெரிவித்தார். ஆனால் இரவு வரை உடல் அடையாளம் காணப்பட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதை இலங்கை அதிபர் இராசபக்சே நேற்று பிற்பகலில் அதிகாரப்படியாக அறிவிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மாலை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

வழக்கமாக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டால் அவர்கள் வீர மரணம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம் முறைப்படி அறிவிக்கும். மேலும் அவர்களுக்கு மாவீரர், பிரிகேடியர் உள்ளிட்ட பட்டங்களும் அறிவிக்கப்படும். ஆனால் அத்தகைய அறிவிப்புகள் எதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடை@ய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தொணி, சமாதான செயலகத்தில் பொறுப்பாளர் புலித்தேவன், காவல்துறை தலைவர் இளங்கோ, இரமேசு சுதர்மன், கபில் அம்மான் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் சிங்களப் படை அறிவித்துள்ளது. இதை விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ்நெட் இணையதளம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஒப்புக்கொண்டுள்ளது.