முருக சிவகுமார் (murugasivakumar)


னந்த விகடன் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகியுள்ள விகடன் வரவேற்பறையில் என்னுடைய "சாக்கியபுத்தன்" வலைப்பூ குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. என் வலைப்பூவை அங்கீகரித்த விகடன் குழுமத்திற்கும், விகடன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.

இரு கை ஓசை! என்ற தலைப்பில்,

"தலித்தியத்தையும், பவுத்தத்தையும் முன்னிறுத்தும் வலைப்பூ. சமூக நிகழ்வுகளை தலித்தியப் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரைகள் நிறைந்திருக்கின்றன. தலித் மக்களின் நலவாழ்வுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியை சமத்துவபுரம் போன்ற திட்டங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசின் நிலை, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் அவலங்கள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் எனப் பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் கண் சிமிட்டுகின்றன!"

- என்று சமூக மாற்றத்திற்கான வலைப்பூ என அடையாளப்படுத்தி பதிவு செய்துள்ள விகடனுக்கும், அதன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.

இந்த தருணத்தில், என் வலைப்பூவை கண்டு பதிவுகளை படித்துவரும் வாசக நண்பர்களுக்கும், பின்னூட்டமிடும் - ஓட்டுப் போடும் தோழர்களுக்கும் சமீபத்தின் நட்சத்திர பதிவராக தெரிவு செய்த தமிழ்மணம் இணையத்திற்கும், தமிழிஷ் உள்ளிட்ட பதிவு திரட்டிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். இந்த வலைப்பூ ஆக்கத்தில் உதவிய தோழர் ஸ்ரீதருக்கு சிறப்பு நன்றி.