undefined
undefined
முருக சிவகுமார் (murugasivakumar)


நான் ஆடியபோது
ரசித்தவனோடு ரசித்து
தேவரடியா என்றாய்...

உன் பெண்டிர்
விரல் சுட்டி
தேகம் குலுக்கியதை
பரதம் என்றாய்...

நீ பெருமையாக
உணரும் தேவரடியா
நாட்டியத்தை - நான்
ஆடியபோது தேவகலை
உனக்கு வராதென்றாய்....

களையெடுத்து அறுப்பறுத்து போர் அடிக்கும்
எனதுடலின் நெளிவு
சுளிவு அசைவை
நீ பாதம் நக்கி
கற்ற குரு நடராசன்
ஒருபோதும் தரவில்லை...

சுற்றிலும் கசடுகளை
சுத்தப்படுத்தும்
எறவானத்து - என்
துடைப்பக்கட்டையே மேல்
என்னை ஒதுக்கும்
உன் குருவைவிட...

(உண்மை 01.01.2008 இல் எழுதியது)

undefined
undefined
முருக சிவகுமார் (murugasivakumar)

யாழ்ப்பாணத்தில் 1990-ஆம் ஆண்டு புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது. அந்த வானொலியை அழிக்க இலங்கைப் படைகள் கிட்டத்தட்ட 23 முறை தாக்குதல்கள் நடந்தன. ஆனாலும் உடனுக்குடன அது சரி செய்யப்பட்டு தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

இந்நிலையில் வன்னியில் போர் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் 16-ஆம் தேதியுடன் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது. இன்று 5-ஆம் தேதி கரும்புலிகள் நினைவு நாளை முன்னிட்டு,

”ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிருணயிக்க முடியாது; இறுதி இலட்சியத்தை அடையும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்”
- தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

என்ற அறிவிப்போடு இணையதளம் மூலம் தனது ஒலிபரப்பை ”புலிகளின் குரல்” தொடங்கியுள்ளது.
இதற்கான சுட்டி: http: //www.votradio.com/live/live.html
http://www.pulikalinkural.com/

செய்திகள், காணொலிகள், ஒலிப்பதிவுகள், பாடல்கள், ஒளிப்படங்கள் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.
செல்பேசி மூலம் இந்த வானொலியை கேட்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.