முருக சிவகுமார் (murugasivakumar)


நான் ஆடியபோது
ரசித்தவனோடு ரசித்து
தேவரடியா என்றாய்...

உன் பெண்டிர்
விரல் சுட்டி
தேகம் குலுக்கியதை
பரதம் என்றாய்...

நீ பெருமையாக
உணரும் தேவரடியா
நாட்டியத்தை - நான்
ஆடியபோது தேவகலை
உனக்கு வராதென்றாய்....

களையெடுத்து அறுப்பறுத்து போர் அடிக்கும்
எனதுடலின் நெளிவு
சுளிவு அசைவை
நீ பாதம் நக்கி
கற்ற குரு நடராசன்
ஒருபோதும் தரவில்லை...

சுற்றிலும் கசடுகளை
சுத்தப்படுத்தும்
எறவானத்து - என்
துடைப்பக்கட்டையே மேல்
என்னை ஒதுக்கும்
உன் குருவைவிட...

(உண்மை 01.01.2008 இல் எழுதியது)

0 Responses