Showing posts with label பா.ஜ.க.. Show all posts
Showing posts with label பா.ஜ.க.. Show all posts
முருக சிவகுமார் (murugasivakumar)
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கட்காரி பிராமணர் சாதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதே போல, வியாழன்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து எல்.கே.அத்வானியை விலக வைத்து, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் தேர்வு செய்யப்பட்டிருகிறார். அவரும் பிராமணர் சாதியை சேர்ந்தவர்.

இது வரையில் பாரதிய ஜனதா கட்சின் தேசிய தலைவராக இருந்த இராஜ்நாத் சிங் வயது 76. எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்த எல்.கே.அத்வானிக்கு வயது 83 என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சிக்கு புதிய இரத்தம் செலுத்தப்பட வேண்டும். அதுவும் இளம் இரத்தம் செலுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவிக்கு கட்காரியும், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சுஷ்மா சுவராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிப்படையாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம், பதவி விலகியிருக்கும் இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் பிராமணர் அல்லாதவர்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்காரியும், சுஷ்மாவும் பிராமணர்கள்.

பா.ஜ.க.வை பொறுத்த வரையில் அது முன்னேறிய வகுப்பினரின் கட்சி என்றும், குறிப்பாக, பிராமணத் தலைவர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சி என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், பிராமணர் அல்லாத இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் முக்கிய தலைமை பதவியில் இருப்பதை பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. இளம் தலைவர்கள் கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை மீண்டும் பா.ஜ.க.வை பிராமணத் தலைவர்களின் ஆதிக்கத்தில் கொண்டுவர திரைமறைவில் திட்டமிட்டு, அதை சாதித்து கொண்டுள்ளது.

பா.ஜ.க. தலைவராக இருக்கும் நிதின் கட்காரி மராட்டியத்தை சேர்ந்த பிராமணர். அம்மாநில பா.ஜ.க. தலைவராக இருந்து வந்தார். முன்பு இம்மாநிலத்தில் இருந்த பா.ஜ.க. சிவசேனை கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

சுஷ்மா சுவராஜ் முன்பு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி நடுவண் ஆட்சியில் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்தவர்.

அண்மையில் கருநாடக மாநிலத்தில் குவாரி ஊழல் பண முதலைகளான அமைச்சர்கள் கருணாகரன், ஜனார்த்தனன் ஆகியோர் செய்த ஊழலை தட்டி கேட்டதாலே எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க அவர்கள் முடிவெடுத்து, பணத்தால் சதித் திட்டம் தீட்டினர். அப்போது, சமாதானம் செய்வதாக கூறி எடியூரப்பாவை ஊழல் முதலைகளுக்கு பணியவைத்த பெருமை சுஷ்மா சுவராஜுக்கே உரியது. காரணம், அந்த பணமுதலைகளோடு சேர்ந்து சுஷ்மா என்ற முதலையும் பணத்தை பெருக்கிவருவதாக கூறப்படுகிறது.

அத்வானியின் பிறந்த நாளில் சமாதானம் நாடகத்தை நடத்தி தன்னை வலிமையானவராக காட்டிக் கொண்ட சுஷ்மா இப்போது, அத்வானியை தள்ளிவிட்டு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். இதுவெல்லாம் அந்த சாதிக்கு புதிதல்லதானே?

பிற்போக்குவாத முட்டாள்களின் அமைப்புக்கு எந்த முட்டாள் தலைமை பதவிக்கு வந்தால் என்ன?

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்ன தெரியுமா? பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்ற கட்காரி பேசுகையில், தலித்துகளுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினார். ஆடுகளை ஓநாய் பாதுகாப்பதாக சொல்வதை யாராவது நம்புவார்களா? அப்படி நம்பினால், டாக்டர் அம்பேத்கர் சொல்லில் சொல்வதானால், அவர்களெல்லாம் பலியாடுகள்!