முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் சிங்களப் படையினருடனான போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் என்று கூறி சில ஒளிப்படங்களை (வீடியோ ) இலங்கை அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த உடல் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல என்றும், பிரபாகரனைப் போல பிளாஸ்டிக் சர்ஜரிசெய் யப்பட்ட யாரோ ஒருவரின் உடல் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்தியாவும் இது குறித்து ஐயம் எழுப்பியிருப்பதுடன், பிரபாகரன் பற்றிய கூடுதல் ஆதாரங்களை தரும்படி சிங்கள அரசு வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கடந்த திங்கள்கிழமை அதிகாலை பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து தளபதிகளுடன் தப்பிச் செல்ல முயன்றபோது ஏவுகணை வீசி சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் இலங்கை அரசு வெளியிடவில்லை. இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் உயிருடன் நலமாக உள்ளார் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பன்னாட்டு தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே, சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் கிடைத்திருப்பதாக அறிவித்த சிங்களப் படை, பிரபாகரனைப் போல் தொற்றமளிக்கும் உடலின் ஒளிப் படங்களையும் வெளியிட்டது. பிரபாகரன் 2 நாட்களுக்கு முன்@ப கொல்லப்பட்டு விட்டார். அவரின் உடல் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழைமை காலை கண்டெடுக்கப்பட்டது. அவரின் தலையில் குண்டு பாய்ந்த காயங்கள் இருந்தனஎன்று சிங்களப் படை தளபதி சரத் பொன்சேகாவும், செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காராவும் தெரிவித்தனர். ஆனால் பிரபாகரனின் உடல் தோற்றம் பற்றி செய்தியாளர் எழுப்பிய ஐயங்களுக்கு நாணயக்காரா விடையளிக்கவில்லை.

இலங்கை அரசு வெளியிட்ட ஒளிப்படத்தில் இருப்பது பிரபாகரனின் உடல்தான் என்று இலங்கை அரசு கூறினாலும், பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே நேற்று காலை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பிரபாகரன் பற்றி எதுவுமே குறிப்பிடாத நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பிரபாகரனின் உடல் படத்தை சிங்களப் படை வெளியிட்டது ஏற்கும்படி இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனின் உடல் 2 நாட்களுக்கு தண்ணீரில் கிடந்ததாக சிங்களப் படை கூறியுள்ளது. அவ்வாறு தண்ணீரில் கிடந்தால் உடலும், முகமும் உப்பிப்போவதுடன், கருத்துப் போயிருக்கும். ஆனால் பிரபாகரனின் தலையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படும் இடத்தில் குருதித் துளிகளே இல்லை. பிரபாகரனின் கண்களும் செயற்கையாக பொருத்தியது போல் தொன்றுகிறது. தண்ணீரில் 2 நாட்கள் கிடந்த உடலின் தலையை தூக்கவே முடியாது. ஆனால் பிரபாகரனுடையது எனப்படும் உடலின் தலையை சிங்களப் படை வீரர் ஒருவர் மிக எளிதாக தூக்கிக் காட்டினார். எனவே இதுபிரபாகரனுடையது இல்லை என்ற ஐயம் எழுந்துள்ளதுஎன்று கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

பிரபாகரனின் உடல் நேற்று காலை தான் கண்டெடுக்கப்பட்டதாக சிங்கள போர்ப்படை தெரிவித்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களி@@ய அவரின் உடலை மரபணு ஆய்வு செய்து விட்டதாக சிங்கள போர்ப்படை கூறியிருப்பதும் ஐயத்தை அதிகரித்துள்ளது. பிரபாகரனுக்கு 55 வயதாகும் நிலையில், இலங்கை அரசு வெளியிட்டுள்ள படத்தில் அவரின் உடல் 25 முதல் 40 வயதானதைப் போல மிகவும் இளமையாகத் தோன்றுகிறது.

சிங்களப் படையினரால் தேடப்படும் பிரபாகரன் தப்பிச் செல்வதாக இருந்தால் ஏன் சீருடையுடன் செல்ல வே ண்டும்? அடையாள அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்?

திங்கள்கிழமையன்று ஏவுகணை வீசி கொல்லப்பட்டதாகவும், இதில் பிரபாகரனின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டதாகவும் கூறிய சிங்களப் படை, அடுத்த நாள் பிரபாகரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறி உருக்குலையாத உடலை காட்டியது எப்படி?

தலைப் பகுதியை காட்டாமல் துணி போட்டு மூடி வைத்திருந்தது ஏன்? பிரபாகரனை கரய முள்ளிவா#க்கால் பகுதியில் சுற்றி வளைத்து விட்டதாக முதலில் கூறிய சிங்களப்படை, பின்னர் அவரின் உடலை நந்திக்கடல் என்ற இடத்தில் கண்டெடுத்ததாகக் கூறுவது ஏன்? என்பவை உள்ளிட்ட பல்வேறு வினாக்களை ஊடகத் துறையினர் எழுப்பியுள்ளனர். ஆனால் இவற்றில் எந்த வினாக்களுக்கும் விடையளிக்கப்படவில்லை.

அது மட்டுமின்றி, “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வழக்கமாக தலை முடிக்கு சாயம் பூசுவது கிடையாது; அடிக்கடி முகச்சவரம் செய்வதும் இல்லை. அது மட்டுமின்றி அண்மைக் காலமாக அவர் மீசை வளர்ப்பதும் இல்லை. ஆனால் பிரபாகரனுடையது என்று கூறப்படும் உடலின் முகத்தில் அப்போதுதான் முகச்சவரம் செய்யப்பட்டிருக்கிறது . மேலும் இயல்புக்கு மாறாக மீசை இருப்பதுடன், தலைக்கும், மீசைக்கும் சாயம்பூசப்பட்டுள்ளது. பிரபாகரனின் உண்மையான காதும், படத்தில் காட்டப்படும் காதுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பிரபாகரனின் மூக்கு இயல்பாக இருப்பதை விட படத்தில் மிகவும்கூராக உள்ளது. பிரபாகரனின் நாடியில் ஒரு வெட்டுக் காயம் இருக்கும். ஆனால் படத்தில் வெட்டுக் காயம் இல்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் பிரபாகரனின் உடல் பிளாஸ்டிக் சரஜரி முறையில் உருவாக்கப்பட்டது போல தொன்றுகிறதுஎன்றும் அந்த வல்லுநர்கள் கூறினார்கள். இலங்கை அரசு வெளியிட்ட படத்தை இந்தியாவும் நம்பவில்லை. பிரபாகரன் குறித்த மேலும் ஆதாரங்களை வெளியிடும்படி இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனிடை@ய பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் இயக்க பன்னாட்டுத் தொடர்பாளர் பத்மநாதன் மீண்டும் கூறியுள்ளார்.

.

|
2 Responses
  1. Anonymous Says:

    virivaha engaluku vilakam thantha ungaluku nantri.neengal sonna mathiri antha bodyil ulla kangalil enaku santheham vanthathu.ithu muluka muluka thamil makkalayum, sinhala makalayum ematuvathatku eduka patta padame. PRABHAKARAN VARUVAR November 26, EELAM KIDAITHU VITTATHU ENDRU SOLLI THAMILANUKU VIDIVU KAALAM THARUVAAR. meendum meendum ungaluku NANTRIKAL.


  2. Anonymous Says:

    eppadiyum thalaivar irantha idathil avarudan thangiruntha sila poralikalin udalkal irunthiruka vendum. THALAIVA NEENGAL VALA VENDUM, EELAM MALARVATHAI KANA VENDUM.