முருக சிவகுமார் (murugasivakumar)

பள்ளத்து தெருவுல
மண்ணுலயும்
கரும்பு சோகையிலேயும்
எ றவானம் இடிக்கிற
வூடுதான் ஊரெல்லாம்...

சனமெல்லாம் தெரண்டு
கல்வூடு கட்டினோம்
காளியாத்தாவுக்கு...

கையில
சாட்டை
தலையில கரகம்
நாக்க கடிச்சிகினு
பெருமாள் தாத்தா
சாமி வந்து ஆடுவாரு ...

உக்கரமாஆடும்போது
விலகின வேட்டி சந்துல
பின்னால
குண்டூசியில
குத்திட்டாரு சுப்ர மாமா

"தேவிடியா பசங்களா
இனிமே மயிருள்ள கூட
சாமியாட வரமாட்டேன்"னு
கரகத்தை போட்டுட்டு
ஓடிடுச்சி சாமி

ஊரே சிரிச்சது சாமிய பார்த்து
4 Responses
  1. :) நல்லா இருக்கு


  2. subha Says:

    funny.very nice


  3. subha Says:

    Funny. very nice ya


  4. Anonymous Says:

    annaa,ivvaaraana pakadi kavithaikal varuvathillai.neengal thodarnthu ezhuthungal.-raavanaa