முருக சிவகுமார் (murugasivakumar)
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தி
.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் 12 இடங்கள் ஏற்கெனவே அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றவை. 9 இடங்கள் புதியவை. அதே போல் காங்கிரசு கட்சி களமிறங்கும் 16 தொகுதிகளில் 7 இடங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும்.
தி.மு.க. தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்களில் தி.மு.க.வும், 16 இடங்களில் காங்கிரசு கட்சியும், 2 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளும், 1 தொகுதியில் முசுலிம் லீக் கட்சியும் போட்டியிடுமென்று சனிக்கிழமை இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை ஞாயிற்றுக் கிழமை கலைஞர் அறிவித்தார்.

தி
.மு.. போட்டியிடும் 21 தொகுதிகளின் விவரம்:
1. திருவள்ளூர், 2. வடசென்னை 3. தென்சென்னை, 4.மத்திய சென்னை, 5. திருப்பெரும்புதூர், 6.அரக்கோணம், 7. கிருட்டினகிரி, 8.தருமபுரி, 9.திருவண்ணாமலை, 10.கள்ளக்குறிச்சி, 11. நாமக்கல், 12.நீலகிரி (தனி), 13.பொள்ளாச்சி, 14.கரூர், 15. பெரம்பலூர், 16. நாகப்பட்டினம் (தனி), 17.தஞ்சாவூர், 18.மதுரை, 19.இராமநாதபுரம், 20.தூத்துக்குடி, 21.கன்னியாகுமரி.

இவற்றில்
சென்னையில் உள்ள 3 தொகுதிகள், திருப்பெரும்புதூர், கிருட்டினகிரி, திருவண்ணாமலை (பழையபெயர்: திருப்பத்தூர்), கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்Œõவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி (பழைய பெயர்: திருச்செந்தூர்) ஆகிய 12 தொகுதிகள் ஏற்கெனவே தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றவை. மீதமுள்ள 9 தொகுதிகளில் தி.மு.க. இம்முறை புதிதாகப் போட்டியிடுகிறது.

கடந்த
தேர்தலில் தி.மு.க. 15 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அவற்றில் இம்முறை போட்டியிடும் 12 தொகுதிகள் தவிர மீதமுள்ள 3 தொகுதிகளில் ஈரோடு (பழைய பெயர் திருச்செங்கோடு), கடலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொகுதி கலைக்கப்பட்டுவிட்டது.

காங்கிரசு
கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளின் விவரம்:
1.காஞ்சிபுரம் (தனி), 2.ஆரணி, 3.சேலம், 4.ஈரோடு, 5.திருப்பூர், 6.கோவை, 7.திண்டுக்கல், 8.திருச்சி, 9.கடலூர், 10.மயிலாடுதுறை, 11.சிவகங்கை, 12.தேனி, 13.விருதுநகர், 14.தென்காசி, 15.திருநெல்வேலி, 16.புதுச்சேரி.
இவற்றில் சேலம், திருப்பூர் (பழைய பெயர்: கோபி), திண்டுக்கல், மயிலாடுதுறை,சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே காங்கிரசு போட்டியிட்டு வெற்றி பெற்றவை. மீதமுள்ள 9 தொகுதிகள் புதிய தொகுதிகள்.

கடந்தமுறை
காங்கிரசு வென்ற நாமக்கல் (பழைய பெயர்: இராசிபுரம்), நீலகிரி ஆகிய தொகுதிகள் இம்முறை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பழனி தொகுதி கலைக்கப்பட்டுவிட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளின் விவரம்:
விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)

இந்திய
யூனியன் முசுலிம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதி: வேலூர்

தி
.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அக்கட்சி தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் தி.மு.க. அணியில் சேர மனிதநேய மக்கள் கட்சி மறுத்துவிட்டது.

அதிமுக
கூட்டணியில்..
இந்தியக் கம்யுனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி)
0 Responses